தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றியதால் விரத்தியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-18 01:40 GMT

பைல் படம் 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மடையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (45). இவரது 15 வயது மகள் பூஜா என்கிற ஜனனி (15).தனது மகளை சின்னப்பள்ளிகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். பின்னர் ஒடுகத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்தார். இரண்டு நாட்கள் பள்ளிக்குச் சென்ற மாணவி, இந்த பள்ளியில் படிப்பதற்கு விருப்பம் இல்லாததால் இதுகுறித்து தந்தையிடம் என்னை ஏன் இந்த பள்ளியில் சேர்த்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் பூஜாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதை பார்த்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு ஒடுகத்தூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சென்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News