பைக் மீது மினி பஸ் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

புத்தளத்தை சேர்ந்த தங்கமணி தன் மகன், மகளுடன் பைக்கில் நாகர்கோவில் சென்றபோது, வழியில் நடந்த விபத்தில், மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-02-01 04:05 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள உத்தண்டன் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் தங்கமணி (54). இவருக்கு கோடீஸ்வரி (14) என்ற மகளும், புகழேந்திரன் (7) என்ற  மகனும் உள்ளனர். இரண்டு பேரும் புத்தளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.      இந்த நிலையில் நேற்று கோடீஸ்வரி, புகழேந்தி ஆகியோரை  பைக்கில் ஏற்றிக்கொண்டு தங்கமணி   நாகர்கோவில் செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே  வந்த மினி பஸ் ஒன்று தங்கமணி ஓட்டி வந்த பைக்கில் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.      

பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது கோடீஸ்வரி ஏற்கனவே உயிரிழந்தத விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த தங்கமணி மற்றும் புகழேந்திரன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.       இது குறித்து சுசீந்திரம் போலீசார் மினி பஸ்  டிரைவர் நாகர்கோவில் பகுதி அபினேஷ் (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News