பேச்சிப்பாறையில் பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

பேச்சிப்பாறையில் பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

Update: 2023-10-23 09:57 GMT

உயிரிழந்த மாணவன்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் மலையோர கிராமம் பேச்சிப்பாறை அருகிலுள்ள வலியமலை என்ற காணிக்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் காணி. ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மகன் அபினேஷ் (13). இவர் ஆலம்பாறை பகுதியில் உள்ள பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பு படித்து வருகிறார். மட்டுமின்றி அங்குள்ள தங்கும் விடுதியில் படித்து வந்தார். இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறையாைனதால் மாணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பொன்மனை பகுதியில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயுடன் சென்றுள்ளார். அங்கிருந்து மலை பாதை வழியாக வீட்டிற்கு திரும்பி செல்லும்போது, வழியில் கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்துள்ளது. இதை சிறுவன் தாயிடம் தெரிவித்த உடன், பழங்குடி மக்கள் முதலுதவி செய்துள்ளனர். அந்த பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாணவரை பொதுமக்கள் சுமந்து, நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News