நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

குருவிகுளம் அருகே கல்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-10-29 02:59 GMT

நீரில் மூழ்கி உயிரிழப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள சின்னவாகை குலத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கோடி (10). கோடி ஊர் அருகே உள்ள கல் குழியில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால்  சிறுவன் கோடி  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் குருவிகுளம் போலீசார்  கோடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News