கவுன்சிலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

நெல்லை மாநகராட்சி 52வது வார்டு பகுதியில்உள்ள கரீம் நகர், அமுதா பிட் நகர் போன்ற பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க கோரி கவுன்சிலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2024-01-30 05:45 GMT

எஸ்டிபிஐ மனு 

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் நித்யபாலய்யாவை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் 52வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கரீம் நகர், அமுதா பிட் நகர் போன்ற பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் ஆங்காங்கே தேங்கிய மழை நீரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Tags:    

Similar News