இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ,கீழ்நமண்டி பகுதியில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் .

Update: 2024-06-19 01:09 GMT

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகள் துவக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து முதற்கட்ட அகழாய்வுப் பணியின் போது எடுக்கப்பட்ட அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட சூதுபவல மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள், கல்மணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News