அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-05 02:45 GMT

காவல் நிலையம் 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடித்த காலந்திரா பகுதி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கிராமிய காவல் உதவியாளர் மஞ்சுநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக அனுமதியின்றி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்பியம்பட்டு பகுதியில் இருந்து ராஜா மகன் திருப்பதி என்பவர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணல் ஏற்றி வந்த லாரியை கிராமிய போலீசார் பறிமுதல் செய்தும், திருப்பதி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News