பளுகல் அருகே ஆற்று மணல் கடத்திய டெம்போ பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே ஆற்று மணல் கடத்திய டெம்போவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-26 07:13 GMT
மணலுடன் பறிடுதல் செய்த வாகனம்

கன்னியாகுமரி மாவட்டம், பளு கல் அருகே அம்பேற்றின் காலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.        அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை கட்டினார்.

போலீசார் நிற்பதை கண்ட டிரைவர் டெம்போவை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.  இதை அடுத்து போலீசார் டெம்போவை சோதனை செய்தபோது அதில் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் டெம்போவுடன்  மணலையும் பறிமுதல் செய்தனர்.  மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News