புகையிலை பொருட்கள் பறிமுதல்!

புகையிலை பொருட்கள் பறிமுதல்.

Update: 2024-06-15 04:45 GMT

புகையிலை பொருட்கள்

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடைவீதி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலை அண்ணாநகரை சேர்ந்த தனசேகர்(48) என்பவர் டீக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் விராலிமலை சோதனை சாவடி அருகே ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி (40) என்பவர் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தனசேகர், ரங்கசாமி இருவரையும் போலீசார் கைது செய்தனர்
Tags:    

Similar News