புகையிலை பொருட்கள் பறிமுதல்!
ஆலங்குடி அருகே வடகாடில் அத்துமீறு விற்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Update: 2024-07-05 14:28 GMT
ஆலங்குடி அருகே வடகாடில் அத்துமீறு விற்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் திருஞானம் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நெடுவாசலில் பெட்டிக்கடையில் புகையிலைபொருட்கள் விற்பனை செய்த சுப்பிர மணியன்(64) என்பவரை கைது செய்தனர். அவரிடம் ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதேபோல், அணவயலில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தர்மராஜ்(57), பட்டுக்கோட்டை சித்துக்காட்டை சேர்ந்த கார்த்திகேயன்(55) ஆகியோரை கைது செய்து ரூ.14 ஆயிரத்து 868 மதிப்புள்ள பொருட்கள், ஒரு மொபட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.