அத்துமீறி மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-01-12 11:29 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அனுமதியின்றி மன் கடத்திய ஜேசிபி உள்பட 5 வாகனம் பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாச்சகுப்பம் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதியில் லாரிகள் மூலம் மண் கடத்திவருவதால் சாலையில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதம் அடைவதாகவும் மற்றும் சாலைகள் சேதம் அடைவதாகாவும் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அனுமதியின்றி போலி ஆவணம் வைத்து மண் கடத்தி வந்ததை தொடர்ந்து 5 லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News