செளமிய நாராயணா பெருமாள் திருவீதி உலா

சிவகங்கை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

Update: 2024-02-17 05:03 GMT

சௌமிய நாராயண பெருமாள் திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு இரண்டாம் திருநாளில் உற்சவர் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழா கொடியேற்றுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் இரண்டாம் திருநாளில் உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்கள் வானவெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News