மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Update: 2023-12-11 06:12 GMT

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் இணைவு பெற்ற தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி விரைவில் நடத்தப்பட உள்ளது, இதற்கான மாவட்ட அளவிலான அணிகளுக்கு வீரர்கள் தேர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து, பெரம்பலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி டிசம்பர் 10ஆம் தேதி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில் 18 வயதுக்குட்பட்ட பிரிவு போட்டிக்கான தேர்வில் மாணவ, மாணவிகள், 120க்கும் மேற்பட்டோர் தங்களது அசல் வயது சான்று மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மேலும் அங்கு நடைபெற்ற தனி திறன் போட்டி தேர்வில் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் சிறப்பாக விளையாடிய மாணவர்களை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வினை தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் பிரேம்நாத் மற்றும் தஞ்சாவூர் பயிற்சியாளர் குணசீலன் மத்திய மண்டல திருச்சி ரயில்வே கூடை பந்து பயிற்சியாளர் ஐஸ்வர்யா ஆகியோர் தலையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது, இதில் பெரம்பலூர் மாவட்ட அணிக்கான 12 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மாநில அளவில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி சார்பில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News