கஞ்சா விற்பனை: இருவர் கைது

சின்னசேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது.

Update: 2024-05-23 05:35 GMT

கைது

சின்னசேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் பைபாஸ் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பைபாஸ் சாலையில், பாண்டியன்குப்பம் கிராமத்திற்கு செல்லும் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து, கஞ்சா விற்பனை செய்த பாண்டியங்குப்பத்தை சேர்ந்த ஆலமுத்து மகன் ஆனந்த்,23; ரமேஷ் மகன் அறிவழகன்,23, ஆகியோரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா, பஜாஜ் பிளாட்டினா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News