நான் தமிழக முதல்வராக வரும்போது ராஜா நீங்க தப்பவே முடியாது - சீமான்

நான் முதல்வரானால் காவிரி எனக்கு சொந்தம் எனது உரிமை என நிலைநாட்டுவேன் என மேட்டூரில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

Update: 2023-10-20 08:58 GMT

சீமான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம்- மேட்டூர் சதுரங்காடியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரி எங்கள் உரிமை எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: எனது கட்சியில் தலைவன் இல்லை அனைவருமே தொண்டர்கள் தான். வீரப்பனை மோரில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். இவர் திருடன் என்றால் கருணாநிதி ஜெயலலிதா எவ்வளவு பெரிய திருடர்களாக இருந்திருப்பார்கள். இன்று தண்ணீர் பெற்றுத்தர மறுக்கிறார்கள் வீரப்பன் செத்துவிட்டார் வீரப்பன் பிள்ளை நான் இருக்கிறேன். தற்போது 100 டிஎம்சி தண்ணீருக்கு கெஞ்சி வருகிறார்கள். நெல் சேமித்து வைக்க துப்பு இல்லை டாஸ்மார்க் சரக்கு விற்கிறார்கள், நகை அடமானம் வைத்தவர்களுக்கு எல்லாம் தள்ளுபடி என சொன்னியே செய்தாயா? ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்லும் ஒன்றிய அரசு எங்களுடைய அனல் மின் நிலையம் மின்சாரம், அணு மின் நிலைய மின்சாரம் வெளியில் செல்கிறது. ஆனால் தண்ணீர் கேட்டால் கொடுக்க மாட்டோம் இது எங்கள் தண்ணீர் என கூறுகிறார்கள். அதைக் கேட்க துப்பு இல்லை. சீமான் ஒரு நாள் தமிழக முதல்வர் வரும்போது ராஜா நீங்க தப்பவே முடியாது என்று கூறினார் நான் முதல்வரானால் காவிரி எனக்கு சொந்தம் எனது உரிமை என நிலைநாட்டுவேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News