சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-22 09:56 GMT
கோப்பு படம்
நீடாமங்கலம் ,வலங்கைமான் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் எடை கொண்ட சன்னரக நெல் 156 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.