திருப்பூரில் மநீம சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூரிலிருந்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் ரூ. 2.5லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-31 15:52 GMT
நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த நிர்வாகிகள் 

மக்கள் நீதி மய்யம் சார்பாக ரூ.2.5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு. திருப்பூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தென் மாவட்ட மக்களுக்காக திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக ரூ 2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாகனத்தை மாநில செயலாளர் (பரப்புரை) அனுஷா ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கமல் கே.ஜீவா  தலைமை வகித்தார்.

இந்நிகழ்வினை மாவட்ட துணை செயலாளர் செ. மகேந்திரன் ஒருங்கிணைத்தார்.  மாவட்ட பொருளாளர் ஜான்சன், ஸ்ரீனிவாசா திரையரங்க உரிமையாளர்  தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News