வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-12-21 12:31 GMT

கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட, தென் மாவட்டங்களில், வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக, நிவாரணப் பொருட்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருது பாண்டியன், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்ரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ், மேலாளர் கண்ணன், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதேபோல், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் வழங்கிய 4200 கிலோ அரிசி பிஸ்கட் பால் பவுடர் உள்ளிட்ட ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன நிகழ்வில் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே சாமிநாதன் கை கோவிந்தராஜன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தொடர்ந்து இருந்தனர்

Tags:    

Similar News