பெண்ணிடம் 7½ பவுன் செயின் பறிப்பு

ரயிலில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற நபர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-13 02:32 GMT

செயின் பறிப்பு

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அபிராமி (41). இவர் சென்னை ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து குடும்பத்துடன் திருத்தணி முருகர் கோவிலுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு திருத்தணியில் இருந்து ரயிலில் ஆவடி வரை செல்வதற்காக ரெயில் வந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் ரயில் வருவதற்கு முன் சிக்னலுக்காக நின்றது. அப்போது இருக்கையில் படுத்திருந்த அபிராமி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயினை அடையாளம் தெரியாதா சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளான். இது குறித்து அபிராமி அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News