மின்வாரிய அலுவலகங்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

தாசநாயக்கன்பட்டி, தில்லை நகர் மின்வாரிய அலுவலகங்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-01-02 02:21 GMT

மின் வாரியம் 

சேலம் சீலநாயக்கன்பட்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் தாசநாயக்கன்பட்டி பிரிவு அலுவலகமானது திருச்சி மெயின்ரோடு, சுப்ரமணிய நகரில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அலுவலகம் பிளாட் எண் 52, 5-வது கிராஸ், சாமியப்பா நகர் அனெக்ஸ், தாசநாயக்கன்பட்டி என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு, இன்று  முதல் இந்த முகவரியிலேயே இயங்கும். அதேபோல பொன்னம்மாபேட்டை கோபால் செட்டி தெருவில் இயங்கி வரும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தில்லை நகர் மேம்படுத்தப்பட்ட பிரிவு அலுவலகமானது பிளாட் எண் 3/48, வாய்க்கால்பட்டரை, பள்ளிக்கூட வீதி, அல்லிக்குட்டை என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் இந்த முகவரியில் இயங்கும் என நகர கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News