கிரிவலப் பாதையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் சிவனடியார்கள்

பழனி முருகன் கோவிலில் மூவாயிரம் சிவனடியார்கள் உழவார பணி மேற்கொண்டனர்.

Update: 2024-03-16 10:22 GMT

கோப்பு படம் 

பழனி முருகன் கோவிலில் இன்று(மார்ச்.16) மூவாயிரம் சிவனடியார்கள் உழவார பணி மேற்கொண்டனர். படிப்பாதை, மலைக்கோயில், கிரிவலப் பாதையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிவனடியார்கள் வருகை தந்துள்ளனர். கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ராஜசேகர் உழவாரப் பணியை துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News