பெண்ணாடத்தில் இன்று கடை அடைப்பு

விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண்ணாடத்தில் இன்று கடை அடைப்பு செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2023-12-29 05:08 GMT

கடை அடைப்பு 

தே. மு. தி. க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையொட்டி தே. மு. தி. க. வினர் பெண்ணாடம் வால்பட்டறையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வணிகர் சங்கத் தினரை சந்தித்து கடைகளை அடைத்து ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற பெண்ணாடம் வர்த்தக சங்கத்தினர் இன்று (வெள்ளிக் கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கடை அடைப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News