15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கடை உரிமையாளர் மீது போக்சோ

திண்டுக்கல்லில் கடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதன் உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

Update: 2023-11-30 06:50 GMT

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கடை உரிமையாளர் மீது போக்சோவில் கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
.திண்டுக்கல் கிழக்கு ரத வீதியைச் சேர்ந்தவா் பரமசிவம் (55). இவா் கிழக்கு ரத வீதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.இந்தக் கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 15 வயது சிறுமி பணிபுரிந்தாா். இந்த நிலையில், கடந்த செப்டம்பா் மாதம், கடையில் தனியாக இருந்த சிறுமிக்கு பரமசிவம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் கடையில் நடந்ததைத் தெரிவித்தாா். அதிா்ச்சி அடைந்த பெற்றோா், இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.இதையடுத்து, பரமசிவம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
Tags:    

Similar News