அனுமதியின்றி மது விற்பனை செய்த பெட்டி கடைக்காரர் கைது

தக்கலை அருகே பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-02 05:48 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது மேலும் காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்,தக்கலை காவல்நிலைய எஸ்.ஐ. கண்ணன் மையிலான போலீசார் தக்கலை பகுதியில் நேற்று ரவுண்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட் டிக்கடையில் பிளாஸ்டிக் மது, கப் அனுமதியின்றி விற்ற கனகராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள் அனைத்து பொருட் களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த வாகன சோதனையில் குடி போதையில் பைக் ஓட்டி வந்த ராஜி உள் பட இருவரை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News