ஷியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினம் - பாஜகவினர் அஞ்சலி

பாஜக நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு

Update: 2024-06-24 04:59 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி ராசிபுரம் நகரம் சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரத் தலைவர் பி. வேலு, தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 71.வது நினைவஞ்சலி நினைவு தினத்தை போற்றும் விதமாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படத்திற்கு நகரத் தலைவர் பி. வேலு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் சதீஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரின் புகழை கோஷங்கள் எழுப்பி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.டி. இளங்கோ, நகர பொது செயலாளர் வெங்கடேசன், காவிராஜ், நகர துணை தலைவர்கள் கார்த்திக், லோகநாதன், வெளிநாடு வாழும் தமிழர் நல பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் குமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் டாக்டர் மணிவண்ணன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் ராம் ,பட்டியல் அணி நகர தலைவர் பெயிண்டர் குமார், கலை கலாச்சார பிரிவு நகரத் தலைவர் சிவசங்கரன், முன்னாள் செயலாளர் கார்த்திக், சமூக ஊடகப் பிரிவு நகரத் தலைவர் தினகர், கிளைத்தலைவர்கள் சுந்தர்ராஜன் ,துளசி , கேவர்சிங், தங்கவேல், கார்த்திக், வழக்கறிஞர் பெரியசாமி ,மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News