கள்ளக்குறிச்சியில் முதன்கை கல்வி அலுவலகத்தை முற்றுகை: 161 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் முதன்கை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 161 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-29 10:54 GMT

முற்றுகை போராட்டம்

கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க மாவட்ட தலைவர் வேளாங்கண்ணி வில்லியன்ஸ் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி பேரணியாக சென்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் முற்றுகையிட சென்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 161 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News