சிப்காட் விவகாரம் - கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-22 04:23 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில். திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியான வழியில் போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து விவசாயிகளை கைது செய்த தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டது . இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்த விவசாயிகள் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து விவசாயிகளுக்கு தொந்தரவு அளித்து வரும் அரசு அதிகாரிகளையும் தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News