தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைப்பெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2024-04-14 04:53 GMT

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான நடைபெற்று வரும், மூன்றாம்கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணி ஆகியன குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஹரிஷ் ஆகியோர், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி ஆகிய மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News