வேப்பூர்: வில்வவனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

கடலூர் மாவட்டம், வேப்பூர் சிவன் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-09 06:22 GMT

சிவராத்திரி விழா

கடலூர், வேப்பூர் சிவன் கோவிலில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ வில்வவனேஸ்வரர் ஆலய மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பல்வேறு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News