மழலையர் பட்டமளிப்பு விழா!
எஸ்.கே.வி. பன்னாட்டு பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 09:43 GMT
மழலையர் பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை கீரனூரில் அமைந்துள்ள எஸ்.கே.வி. பன்னாட்டு பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி தலைவர் மண்ணுலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மலை மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டங்களும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.