பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு: சபாநாயகர் தகவல்
தமிழக பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்க முயற்சி செய்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-21 11:46 GMT
சபாநாயகர் அப்பாவு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கல்வியல் கல்லூரியில் நேற்று ஆய்வு கட்டுரை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில் விரைவில் தமிழகத்தில் 25,000 பள்ளிகளுக்கு மேல் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.