அரளை கற்கள் கடத்தல் - 2 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்

கீரனூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரியிலிருந்து அரவை கற்களை கடத்திய இருவரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-21 04:28 GMT

கைது 

கீரனூர் சப் இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ராஜ் மற்றும் போலீசார் நார்த்தாமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிடாரி அம்மன் கோயில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து அனுமதி இன்றி கற்களை வெட்டி வாகனங்களில் கடத்தி செல்ல முயன்ற நார்த்தாமலையை சேர்ந்த டிரைவர் சிதம்பரம் வயது 24, மணியம்பட்டியை சேர்ந்த வேலு, வாகன உரிமையாளர் கார்த்திக் ராஜா வயது 24 ஆகிய மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் டிரைவர் வேலு தப்பியோடி விட்டார். சிதம்பரம், கார்த்திக் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து சரக்கு வாகனம் டிராக்டர், 10 அடி நீளம் உள்ள 16 அரளை கற்கள், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News