காரில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: வாலிபர் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செயதனர்.

Update: 2024-06-06 13:00 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மந்தித்தோப்பு சாலை பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டனர்.

அதில், புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவா் திருநெல்வேலி கரையிருப்பு வடக்கு தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமாா் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News