தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற மகன் கைது
வீட்டுபத்திரத்திற்காக நடந்த வாக்குவாதத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
தந்தையை கொலை செய்த மகன்
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை அடுத்த பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் சாமி (84)இவரது மகன் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (52).ஆனந்த் தனது தந்தையிடம் வீட்டின் பத்திரத்தை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நேற்று முன்தினம் ஆனந்த் கோபால் சாமியை குளவி கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த கோபால் சாமியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர்.இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோட்டூர் போலீசார் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.