குற்றாலம் அருகே தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

பணம் தர மறுத்ததால் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது.

Update: 2024-02-23 02:21 GMT
கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தளம் பாறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மது வாங்குவதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்ததால் அவரை அசிங்கமாக பேசி கையால் தாக்கி தாய் மற்றும் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News