பெற்றோரின் கல்லறையில் மர்மமான முறையில் மகன் மரணம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பெற்றோரின் கல்லறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மகன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-25 09:36 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவியிடம் தகராறு பெற்றோரின் கல்லறையில் உயிரிழந்த மகன் 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). இவர் இந்த பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி பேச்சியமாளுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் கடந்த 12-ஆம் தேதி காலை தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி பேச்சியம்மாள் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுரேஷை தேடி வந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், சுரேஷின் உறவினர்கள் அவரது தந்தை நினைவு தினம் சில தினங்களில் வருவதை அடுத்து சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள RC கல்லறைத் தோட்டத்திற்கு சென்று பெற்றோரின் கல்லறையை சுத்தம் செய்ய வந்துள்ளனர். அப்போது சுரேஷ் மர்மமான முறையில் தாய் தந்தையரின் கல்லறையின் மேல் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து சுரேஷின் உறவினர்கள் சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவத்திற்கு வந்து பெற்றோரின் கல்லறையில் இறந்த நிலையில் கிடந்த சுரேஷ் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு விஷம் அருந்தி பெற்றோரின் கல்லறையில் உயிரிழந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News