மகன் மாயம்: தாய் புகார் !

கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-04-16 05:12 GMT

தாய் புகார்

கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் கார்த்திகேயன், 28; நகை உருகு பட்டறை வைத்துள்ளார். இவர் கடந்த 11ம் தேதி காலை நகை வாங்க விழுப்புரம் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் சாரதா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News