ஆயுதப்படை கவாத்து பயிற்சி : எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

தூத்துக்குடியில் ஆயுதப்படை கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-17 11:38 GMT

ஆயுதபடை காவலர்களுக்கு காவாந்து பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ராணி உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஷ், சங்கரலிங்கம் மற்றும் சக்திவேல் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News