தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்க எஸ்பி அறிவிப்பு 

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படைவீர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-21 05:14 GMT
எஸ் பி , சுந்தரவதனம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படைவீர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News