சமூகநலத்திட்டங்களைப் பெற சிறப்பு முகாம்கள் - மா.கம்யூ., கோரிக்கை

Update: 2023-12-06 04:48 GMT

கோரிக்கை மனு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில், சமூக நலத்துறையின் கீழ் செயல் படுத்தப்படும் திட்டங்களில் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். சமூக நலத்துறையின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, திருப்பூர் மாநகராட்சி 1- வது மண்டலத்துக்குட்பட்ட வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், ரங்கநாதபுரம், பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறப்பு முகாம்களை நடத்தி, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் ஆகியோர் மனு அளித்தனர்.
Tags:    

Similar News