ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அலுவலர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2024-05-19 06:32 GMT

சிறப்பு கலந்தாய்வு கூட்டம் 

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் கோர்ட்டு காவலர்களுக்கான சிறப்பு குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் எஸ்பிக்கள் சரவணன், குணசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புலன் விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்யவும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து நீதி மன்றத்தில் குற்றவாளிகளை உடனடியாக ஆஜர்படுத்தி வழக்குகளை முடிக்கவும் எஸ்பி கிரண் ஸ்ருதி அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News