கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு துவா நிகழ்ச்சி

சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை தர்ஹாவில் வருடாந்திர கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது.

Update: 2024-01-20 04:33 GMT
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் மகான் பெரிய மீரான் ஒலியுல்லாஹ் தர்ஹா வருடாந்திர கந்தூரி நிகழ்ச்சி இன்று 20/01/24 வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை உலகில் அமைதி நிலவுவதற்கும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும் சிறப்பு துவா ஓதப்பட்டது. இதில் சந்தைப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Tags:    

Similar News