பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 08.02.2024 அன்று நடைபெறவுள்ளது

Update: 2024-01-23 04:58 GMT


பைல் படம்


பெரம்பலூர் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 08.02.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல். பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 08.02.2024 (வியாழக்கிழமை) அன்று மாலை 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் / அவர்தாம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News