கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 16:49 GMT
மருத்துவ முகாம்
கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம். கரூர் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சுதா, இந்திய வங்கியின் சார்பாக மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வசந்த்குமார், புன்னம் சத்திரம் கிளை மேலாளர் சுரேஷ் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர்.