சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

பெரம்பலூரில் வருகின்ற ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 02:29 GMT

சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பல்கீஸ் ஜூன் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், பொதுமக்கள் "வழக்காடிகள், அறிய வாய்ப்பாக பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகின்ற ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையிலான வாரத்தில் நடைபெற உள்ளதால், வழக்காடிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவையோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண் 04328 296206 மற்றும் disaperambalur 1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்." என தகவலில் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News