காவேரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சேலத்தில் உள்ள காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-03 08:14 GMT

சிறப்பு பூஜை

சேலம் டவுன் ஜான்சன் நகர் காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்தது. இதையடுத்து கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று கோவிலில் நடந்தது. அதன்படி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யபட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முதன்மை நாட்டாமை கலைச்செல்வன் மற்றும் ஊர் தர்மகர்த்தா, கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்திருந்தனர்.
Tags:    

Similar News