நாமக்கல் : ஆஞ்சநேயருக்கு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2024-02-12 16:22 GMT

வெண்ணெய் காப்பு அலங்காரம் 

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தை மாத கடைசி நாளை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News