கேப்டன் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-12-09 12:59 GMT

 அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் ஆலயத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் தேமுதிக சார்பில், கேப்டன் பூரண நலம் பெற வேண்டியும்,பல்லாண்டு காலம் வாழ வேண்டியும்,ஸ்ரீ ஆட்சீஸ்வரர் சுவாமிக்கு பால்,தயிர்,இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் 21 பொருள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.. சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் செய்தனர்.. இந்த நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.. இதில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டன் பல்லாண்டு கால வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

Tags:    

Similar News