தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

திருத்துறைப்பூண்டி பிஎஸ்டி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-17 05:32 GMT

சிறப்பு தொழுகை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் ஈகை திருவிழாவானக் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை மேற்கொண்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி பிஎஸ்டி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Tags:    

Similar News