சோகத்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சோகத்தூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் ஆய்வு செய்தல் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 05:07 GMT
தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சியில் 2024-2025 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு விவரங்கள் கிராம ஊராட்சி குழு மூலம் கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பழுதடைந்த ஓலை வீடுகள் இல்லாமல் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் சோகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ஜடையன் மாது தலைமையிலும், வட்டார பணிதளப் பணியாளர் தாமரை முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி செயலர் முருகன்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராம் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News